2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

அச்சுவேலியில் கைக்குண்டு மீட்பு

Sudharshini   / 2015 ஏப்ரல் 19 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

யாழ்.அச்சுவேலி தோப்புப் பகுதியிலுள்ள காணியொன்றிலிருந்து கைக்குண்டொன்றை மீட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (19) காலை தெரிவித்தனர்.

மேற்படி காணியின் உரிமையாளர் விவசாய நடவடிக்கைக்காக நிலத்தை பதப்படுத்திய போது, குண்டு இருப்பதை கண்ணுற்று, அச்சுவேலி பொலிஸ் நிலையத்துக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து அச்சுவேலி 521 ஆவது இராணுவ படையணியின் குண்டு செயலிழக்கும் பிரிவினருடன் சென்று குண்டை மீட்டதாக பொலிஸார் கூறினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .