2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

அபாயகரமான ஆயுதங்களுடன் கைதானவர்களுக்கு பிணை மறுப்பு

George   / 2015 மே 12 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

சுன்னாகம் மயிலிணி பகுதியில் அபாயகரமான ஆயுதங்களுடன் குழுச் சண்டையில் ஈடுபட்ட அறுவருக்கு பிணை வழங்க சுன்னாகம் பொலிஸார் ஆட்சேபனை தெரிவித்தமையடுத்து, எதிர்வரும் 25ஆம் திகதி விளக்கமறியில் வைக்குமாறு மல்லாகம் மாவட்ட நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், செவ்வாய்க்கிழமை (12) உத்தரவிட்டார்.

கடந்த மாதம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து வாள்கள், பெற்றோல் குண்டுகள், கோடாரிகள் என்பன மீட்கப்பட்டதுடன் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த வழக்கு, இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபர்கள் சார்பாக ஆஜராகிய சட்டத்தரணி சந்தேகநபர்களுக்கு பிணை வழங்குமாறு மன்றில் கோரினார். 

சந்தேகநபர்கள் வெளியில் வந்தால், மீண்டும் குழப்பம் ஏற்படுத்தி குழு மோதலில் ஈடுபடுவார்கள் என பொலிஸார் ஆட்சேபனை தெரிவித்தனர்.

இதனையடுத்து, சந்தேகநபர்களுக்கு பிணை மறுக்கப்பட்டதுடன் 25ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .