Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Thipaan / 2015 மே 13 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
- செல்வநாயகம் கபிலன்
யாழ். இருபாலைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை (12) பிற்பகல் உள்நுழைந்து வீட்டிலிருந்த நகை, பணம் என சுமார் 5 இலட்சம் பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன என்று வீட்டு உரிமையாளர் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டிலிருந்தவர்கள், யாழ். நகரத்துக்கு பொருட்கள் கொள்வனவுக்காகச் சென்றிருந்த போது, சமையல் அறையின் ஜன்னல் கம்பிகளை வளைத்து வீட்டுக்குள் நுழைந்து, அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 7 ½ பவுண் நகை மற்றும் 1 இலட்சத்து 75 ஆயிரத்து 600 ரூபாய் பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
42 minute ago
1 hours ago