Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Gavitha / 2015 மே 17 , மு.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
பாடசாலைக்கு சென்ற ஆசிரியரின் வீட்டு கதவை உடைத்து உள் நுழைந்த திருடர்கள், வீட்டிலிருந்த சுமார் 41 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இலத்திரனியல் பொருட்களை திருடி சென்றுள்ளதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக, சுன்னாகம் பொலிஸார் சனிக்கிழமை (16) தெரிவித்தனர்.
இந்த சம்பவம் வியாழக்கிழமை (14) பகல் சுன்னாகம் தெற்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மருதனார் மடம் பகுதியில் உள்ள பாடசாலையில் கற்பிக்கும் மேற்படி ஆசிரியர் வழமை போல் கதவினை பூட்டி விட்டு சென்றுள்ளார். இந் நேரம் உள் நுழைந்த திருடர்கள் பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.
காலை 8 மணியில் இருந்து பகல் 2 மணி வரையான காலப்பகுதிக்குள் திருட்டு இடம்பெற்றுள்ளதாக ஆசிரியர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
50 minute ago
1 hours ago