Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2015 ஜூன் 08 , மு.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
- செல்வநாயகம் கபிலன்
யாழ். அச்வேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத மின்சாரம் பெற்ற மூவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) கைதுசெய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தூர், கலைமதி பகுதியில் அமைந்துள்ள கட்டட பொருட்கள் விற்பனை செய்யும் கடைக்காரர் தனது மின்மானியில் கம்பியை செருகி மின்மானியின் வேகத்தைக் குறைத்த குற்றச்சாட்டிலும் வல்லைப் பகுதியில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற இருவருமாக மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை மின்சார சபையின் புலனாய்வு அதிகாரிகளுடன் அச்சுவேலி பொலிஸார் இணைந்து நடத்திய சோதனை நடவடிக்கையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago