Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2015 ஜூன் 08 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
நீதிமன்ற கட்டடத்தொகுதி மீது கடந்த 20ஆம் திகதி தாக்குதல் மேற்கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், கடந்த வெள்ளிக்கிழமை (05) வீடியோ ஆதாரத்தை வைத்து கைது செய்யப்பட்ட மூவரையும் எதிர்வரும் 12ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் திங்கட்கிழமை (08) உத்தரவிட்டார்.
நீதிமன்ற கட்டடத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டமை மற்றும் வளாகத்தில் நின்றிருந்த வாகனங்களை அடித்து சேதமாக்கியமை தொடர்பாக வீடியோ ஆதாரங்களை திரட்டிய கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த விசேட குற்றத்தடுப்புப் பிரிவினர், விசாரணைகளை மேற்கொண்டு யாழ்.மாநகர எல்லைக்குள் வைத்து 3 சந்தேகநபர்களைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் இன்று திங்கட்கிழமை (08) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். விசாரணையின் போது, 2ஆவது சந்தேகநபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago