Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
George / 2015 ஜூன் 10 , மு.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
வடமாகாண சபையில் முன்பள்ளி நியதிச் சட்டம் வடமாகாண சபையில் நேற்று செவ்வாய்க்கிழமை (09) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மதிய போசனத்தின் பின்னர் சபை உறுப்பினர்களில் சிலர் சபைக்குச் சமூகமளிக்கவில்லை.
அத்துடன், அமைச்சுக்களின் செயலாளர்கள் மதிய போசன இடைவேளை வரையில் சபையில் இருந்தததுடன் அதன்பின்னர் அவர்களின் இருக்கைகள் காலியாகவிருந்தன.
வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில், அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்றது. இதன்போது கல்வி அமைச்சின் கீழான முன்பள்ளி நியதிச் சட்டம் சபையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அமைச்சுக்களின் செயலாளர்கள் சபையில் சமூகமளித்திருந்ததுடன், அவர்களில் சிலர் சபை அமர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது, கைகளில் அலைபேசியை வைத்து அதில் கவனம் செலுத்திய வண்ணம் இருந்தனர்.
மதிய போசன இடைவேளைக்காக சபை கலைந்து மீண்டும் கூடியதும், அமைச்சின் செயலாளர்களின் இருக்கைகள் அனைத்து காலியாகவிருந்தன. அத்துடன், உறுப்பினர்களில் சிலரையும் காணவில்லை.
38 உறுப்பினர்களைக் கொண்ட வடமாகாண சபையில் நேற்றைய மதிய போசனத்தின் பின்னர் 17 உறுப்பினர்களே சபையில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .