2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

நீதிமன்ற தாக்குதல் சம்பவம்: ஒருவர் கைது

Thipaan   / 2015 ஜூன் 16 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சொர்ணகுமார் சொரூபன்

யாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதி மீது கடந்த மே மாதம் 20ஆம் திகதி தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில், பிறவுண் வீதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை பெருமாள் கோவில் பகுதியில் வைத்து, கொழும்பிலிருந்து வந்த விசேட குற்றத் தடுப்புப் பொலிஸார் திங்கட்கிழமை (15) மாலை கைது செய்தனர்.

நீதிமன்ற கட்டடத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டமை மற்றும் வளாகத்தில் நின்றிருந்த வாகனங்களை அடித்து சேதமாக்கியமை தொடர்பாக வீடியோ ஆதாரங்களை திரட்டிய கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த விசேட குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ ஆதாரத்தில் காணப்பட்ட ஒருவரையே விசேட குற்றத்தடுப்புப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வருகின்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X