Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 ஜூன் 16 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
- செல்வநாயகம் கபிலன்
தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 6 சாரதிகளுக்கு, 41 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன் திங்கட்கிழமை (15) தீர்ப்பளித்தார்.
மதுபோதையில் வாகனம் செலுத்திய மூவருக்கு தலா 7,500 ரூபாய் அபராதம் விதித்ததுடன் 12 மாதங்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்தியும் தீர்ப்பளித்தார்.
சாரதி அனுமதிபத்திரம் இன்றி மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய அளவெட்டி பகுதியினை சேர்ந்த சாரதிக்கு 11,500 ரூபாயும் காப்புறுதி பத்திரம் இன்றி முச்சக்கரவண்டி செலுத்திய சாரதிக்கு 5,000 ரூபாயும் தெளிவில்லாத சாரதி அனுமதிப்பத்திரத்தை தன்வசம் வைத்திருந்த மயிலங்காட்டு பகுதியினை சேர்ந்த வாகன சாரதிக்கு 2,000 ரூபாயும் இதன் போது அபராதமாக விதித்து நீதவான் தீர்ப்பளித்தார்.
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago