2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

8 இலட்சம் பெறுமதியான தண்ணீர் பௌஸர் வழங்கி வைப்பு

Kogilavani   / 2015 ஜூன் 17 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

வேலணை பிரதேச சபைக்குட்பட்ட நயினாதீவு மக்களின் தேவைக்காக 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான தண்ணீர் பவுஸர் வழங்கப்பட்டுள்ளதாக வேலணை பிரதேச சபை தவிசாளர் சின்னையா சிவராசா புதன்கிழமை (17) தெரிவித்தார்.

3500 லீற்றர் கொள்ளவுடைய இந்த தண்ணீர் பவுஸர் நயினாதீவு மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. இந்த பவுஸருக்கான நீரானது வேலணை பிரதேசத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு நிரப்பப்படும்.

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய திருவிழா புதன்கிழமை (17) கொடியேற்றத்துடன் ஆரம்பமான  நிலையில் அங்கு வரும் மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு இந்த பவுஸர் உதவியாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X