Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
George / 2015 ஜூன் 19 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஐ.நேசமணி
தெல்லிப்பழை சுகாதார வைத்தியதிகாரி பணிமனைக்குட்பட்ட பகுதிகளில் புகையிலை மற்றும் மதுசார திருத்தச் சட்டத்தை மீறி புகைத்தல் பொருட்கள் விற்பனை செய்த 6 வியாபாரிகளுக்கு 12,000 ரூபாய் அபராதம் விதித்த மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் கறுப்பையா ஜீவராணி, மன்றுக்குச் சமூகமளிக்காத 4 வியாபாரிகளுக்கு பிடியாணை பிறப்பித்தும் உத்தரவிட்டார்.
எந்தவொரு புகைத்தல் பொருளிலும் 80 வீதமான சுகாதார எச்சரிக்கைப் படம் பொறிக்கவேண்டும் என்ற புகையிலை மற்றும் மதுசார திருத்தச் சட்டத்தை பின்பற்றாது வியாபாரம் செய்த அளவெட்டி, மல்லாகம், தெல்லிப்பழை ஆகிய இடங்களைச் சேர்ந்த 10 வியாபாரிகள் கடந்த செவ்வாய்க்கிழமை (16) சுகாதாரப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (18) வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதுடன், வழக்கை விசாரித்த நீதவான் சுருட்டுக் விற்பனையாளர்கள் இருவருக்கு தலா 3,000 ரூபாயும், வெற்றிலையுடன் புகையிலை சேர்த்து விற்பனை செய்த நால்வருக்கு தலா 1,500 ரூபாயும் அபாதம் விதித்தார்.
பீடி, சுருட்டு, வெற்றிலையுடன் புகையிலை விற்பனை செய்த குற்றச்சாட்டில் பிடிபட்ட 4 வியாபாரிகள் மன்றுக்குச் சமூகமளிக்காத நிலையில் அவர்களுக்கு பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago