2025 ஜூன் 28, சனிக்கிழமை

இலத்திரனியல் பொருட்கள் திருட்டு: சந்தேக நபருக்கு பிணை

Thipaan   / 2015 ஜூன் 21 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

சுன்னாகம் தெற்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றினை உடைத்து இலத்திரனியல் உபகரணங்களை திருடிய குற்றச்சாட்டில் கைதான சந்தேகநபர்கள் ஐவரில், மூன்றாவது சந்தேக நபரை 50,000 ரூபாய் பெறுமதியான இரண்டு ஆட்பிணையில் செல்ல மல்லாகம் மாவட்ட நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், வெள்ளிக்கிழமை (19) உத்தரவிட்டார்.

இலத்திரனியல் உபகரணங்களை பழுதுபார்க்கும் கடையின் உரிமையாளரே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்தமாதம் 14ஆம் திகதி சுன்னாகம் தெற்கு பகுதியில் உள்ள ஆசிரியர் ஒருவரின் வீட்டை உடைத்து உட்சென்ற திருடர்கள், 50,000 ரூபாய் பெறுமதியான எல்.சீ.டி ரீவி, மற்றும் இலத்திரனியல் பொருட்கள் என்பவற்றை திருடி சென்றிருந்தனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், ஊரெழு, மானிப்பாய் பகுதியினை சேர்ந்த நால்வரையும் கடந்த 21ஆம் திகதி கைது செய்திருந்தனர்.

அத்துடன் சந்தேகநபர்களின் வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இலத்திரனியல் பொருட்களையும் மீட்டுள்ளனர்.

மூன்றாவது சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சந்தகநபருக்கு பிணை வழங்குமாறு கோரியதையடுத்து வழக்கினை விசாரித்த நீதவான், சந்தேகநபரை பிணையில் விடுவித்ததுடன் அடுத்த வழக்கை  ஜூலை 14ஆம் திகதி ஒத்திவைத்தார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .