2025 ஜூன் 28, சனிக்கிழமை

தேவாலயத்தில் திருடியவர் கைது

Menaka Mookandi   / 2015 ஜூன் 25 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

இளவாலை சென். ஜேம்ஸ் தேவாலயத்தின் காணிக்கை உண்டியலை உடைத்து பணம் திருடிய மெய்கண்டான் பகுதியைச் சேர்ந்த 33 வயது சந்தேகநபரை புதன்கிழமை (24) இரவு கைது செய்ததாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.

தேவாலயத்தில் திருடப்பட்டமை தொடர்பில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் ஏற்கனவே வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .