2025 ஜூன் 28, சனிக்கிழமை

விபசார விடுதி மீது நடவடிக்கை எடுக்குமாறு நீதவான் உத்தரவு

Thipaan   / 2015 ஜூன் 29 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.கர்ணன்

பருத்தித்துறை இலங்கை வங்கிக்கு அண்மையில் இயங்கி வரும் விபசார விடுதி மீது நடவடிக்கை எடுக்குமாறு காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகருக்கு, பருத்தித்துறை மாவட்ட நீதவான் மா.கணேசராசா, திங்கட்கிழமை (29) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேற்படி பகுதியில் நபரொருவர் விபசார விடுதியொன்றை நடத்தி வருவதாக பொதுமக்கள் கடிதம் மூலம் பருத்தித்துறை நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.

அத்துடன், புலனாய்வு பொலிஸாரும் இந்தத் தகவலை உறுதிப்படுத்தினர்.

இதனையடுத்தே விடுதியை முற்றுகையிட்டு நடத்துநரைக் கைது செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .