2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

180 கிலோகிராம் கஞ்சாவுடன் நால்வர் கைது

George   / 2015 ஜூலை 02 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன், ரொமேஸ் மதுசங்க

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்மன் கோவில் பகுதியில் 180 கிலோகிராம் கஞ்சாவுடன் 4 சந்தேகநபர்களை விசேட அதிரடிப் படையினர் வியாழக்கிழமை(02) அதிகாலை 4.30 மணியளவில் கைது செய்துள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் கூறினர்.

கடல் மார்க்கமாக கேரள கஞ்சாவை கடத்திவந்து இறக்கிக் கொண்டு இருக்கும் போதே நால்வரையும் விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட நால்வரையும் தொடர்ந்தும் தடுத்து வைத்துள்ள விசேட அதிரடிப் படையினர்  விசாரணை செய்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .