2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Kogilavani   / 2015 ஜூலை 14 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து, மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைதான 26 இந்திய மீனவர்களையும்; எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மாணிக்கராசா கணேசராசா திங்கட்கிழமை (13) உத்தரவிட்டார்.

தமிழகத்தின் காரைக்கால் மற்றும் நாகப்பட்டிணத்தை சேர்ந்த மீனவர்களே இவ்வாறு விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி மீனவர்கள், கடந்த ஜூன் மாதம் 21 ஆம் திகதி பருத்தித்துறை கடற்பரப்பை அண்மித்த கடற்பரப்பில் 5 விசைப்படகில் வந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் காங்கேசன்துறை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்கள் யாழ்ப்பாணம், கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .