2025 ஜூன் 26, வியாழக்கிழமை

ஆட்பிணையில் விடுவிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் விளக்கமறியலில்

Sudharshini   / 2015 ஜூலை 14 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.கர்ணன்

கொற்றாவத்தை சிவானந்தா விளையாட்டுக்கழகத்தில் கடந்த ஜூன் மாதம் 25ஆம் திகதி இடம்பெற்ற கைகலப்பு தொடர்பில் கைது செய்யப்பட்டு ஆட்பிணையில் விடுவிக்கப்பட்ட 23 பேரையும் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மாணிக்கராசா கணேசராசா திங்கட்கிழமை (13) உத்தரவிட்டார்.

சந்தேகநபர்களை பிணையில் விடுவித்தமை பொதுச் சமாதானத்துக்கு பங்கம் விளைவிக்கும் எனவும் பிணையை ரத்துச் செய்யுமாறு பருத்தித்துறை பொலிஸார் ஆட்சேபனை தெரிவித்ததையடுத்து, நீதவான் அவர்களின் பிணையை ரத்து செய்து மீண்டும் விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.

கொற்றாவத்தை சிவானந்தா விளையாட்டுக்கழகத்தின் கீழ் 3 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த இளைஞர்கள் விளையாடி வருகின்றனர்.

கொற்றாவத்தை சிவானந்தா என்ற பெயரில் இயங்கிய விளையாட்டுக்கழத்தை அல்வாய் மேற்கு சிவானந்தா விளையாட்டுக்கழகம் என சிலர் மாற்றினர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சிலர் பருத்தித்துறை நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்த போது, அனைவரும் சமரசமாக சிவானந்தா விளையாட்டுக்கழகத்தின் கீழ் விளையாடவேண்டும் என நீதிமன்றத்தால் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் பெயர் மாற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு மற்றைய தரப்பினருக்கும் இடையில் கடந்த ஜூன் 25 ஆம் திகதி கைகலப்பு ஏற்பட்டுள்ளது. மேற்படி சம்பவத்தில் அறுவர் படுகாயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட பருத்தித்துறை பொலிஸார் கைகலப்பில் ஈடுபட்ட 23 பேரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில், அவர்களை கடந்த 5ஆம் திகதி பதில் நீதவான் ப.சுப்பிரமணியம் ஆட்பிணையில் செல்ல அனுமதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மேற்படி வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

 

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .