Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 ஜூலை 20 , பி.ப. 02:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
சிறிய வாகனமொன்றில் அனுமதிப்பத்திரமின்றி 6 மாடுகளை சித்திரவதை செய்து கடத்திச் சென்ற 28 வயதுடைய மல்லாகம், 7ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவரை ஞாயிற்றுக்கிழமை (19) இரவு கைது செய்ததாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தூர், பெரியபொக்கணை பகுதியிலிருந்து 4 பசு மாடுகள், 2 நாம்பன் மாடுகளை கடுமையாக சித்திரவதை செய்து கடத்திக்கொண்டு செல்கையிலேயே மேற்படி சந்தேகநபர், புத்தூர் சந்தியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணையில் கடத்தப்பட்ட மாடுகள், இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .