2025 ஜூன் 25, புதன்கிழமை

மாடுகளை கடத்தியவர் கைது

Menaka Mookandi   / 2015 ஜூலை 20 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

சிறிய வாகனமொன்றில் அனுமதிப்பத்திரமின்றி 6 மாடுகளை சித்திரவதை செய்து கடத்திச் சென்ற 28 வயதுடைய மல்லாகம், 7ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவரை ஞாயிற்றுக்கிழமை (19) இரவு கைது செய்ததாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தூர், பெரியபொக்கணை பகுதியிலிருந்து 4 பசு மாடுகள், 2 நாம்பன் மாடுகளை கடுமையாக சித்திரவதை செய்து கடத்திக்கொண்டு செல்கையிலேயே மேற்படி சந்தேகநபர், புத்தூர் சந்தியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணையில் கடத்தப்பட்ட மாடுகள், இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .