2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

28 வர்த்தகர்களுக்கு அபராதம்

George   / 2014 ஜூலை 22 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

யாழ். மாவட்டத்தின் நான்கு நீதிமன்ற எல்லைகளுக்குட்பட்ட பிரதேசங்களிலுள்ள 28 வர்த்தகர்களுக்கு 1 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்டச் செயலக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் இன்று செவ்வாய்க்கிழமை (22) தெரிவித்தனர்.

யாழ். மாவட்டத்தின் மல்லாகம், யாழ்ப்பாணம், ஊர்;காவற்றுறை மற்றும் சாவகச்சேரி ஆகிய நீதிமன்றங்களின் எல்லைகளுக்குட்பட்ட இடங்களில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களில் கடந்த 4 ஆம் திகதி தொடக்கம் 21 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் சோதனை நடவடிக்கையினை, யாழ். மாவட்டச் செயலக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

இதன்போது, காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை, விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாமை மற்றும் நிறை குறைந்த பாண் விற்பனை செய்தமை ஆகிய குற்றங்களின ஈடுபட்ட 28 வர்த்தகர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

தொடர்ந்து, அந்த வர்த்தகர்களிற்கு எதிராக அந்தந்தப் பிரதேச நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இதன்போது, நீதிமன்றங்களினால் 1 இலட்சத்து 30 ரூபா தண்டம் விதிக்கப்பட்டதாக அதிகார சபையினர் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .