2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

4 மாத சிசு உயிரிழப்பு

Kogilavani   / 2014 பெப்ரவரி 26 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

நான்கு மாத சிசுவொன்று  ஊறணி அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 02 மணித்தியாலத்தின் பின்னர் உயிரிழந்ததாகவும் வைத்தியர் இன்மையினாலே இம்மரணம் சம்பவித்ததாகவும் கூறி சிசுவின் தாயார் இன்று புதன்கிழமை முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ். வல்வெட்டித்துறை பொலிகண்டியைச் சேர்ந்த ஜெயராஜா கலா என்பவரே இம்முறைப்பாட்டை செய்துள்ளார்.

'எனது நான்கு மாத சிசுவான ஜெயராஜா தனுஷிகாவை இரத்த உறைவு காரணமாக குறித்த வைத்தியசாலைக்கு செவ்வாய்க்கிழமை (25) கொண்டு சென்றேன்.  இரண்டு மணித்தியாலங்களின் பின்னரே வைத்தியர் வந்தார். வைத்தியர் வந்தபோது சிசு இறந்துவிட்டது' என அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்திருந்தார்.

இச்சிசு இரத்த உறைவு காரணமாக கடந்த 22ஆம் திகதி கொழும்பிலுள்ள சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று திரும்பியிருந்த நிலையிலே மீண்டும் திடீரென இரத்த உறைவு ஏற்பட்டமையினால் ஊறணி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு  வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .