2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

41 இலங்கை மீனவர்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பு

Menaka Mookandi   / 2014 ஜூலை 25 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன், யோ.வித்தியா

இந்தியக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, நேற்று வியாழக்கிழமை (24) விடுவிக்கப்பட்ட 41 இலங்கை மீனவர்களையும் அவர்களின் சொந்த இடங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை (25) காலை அனுப்பி வைத்துள்ளதாக யாழ். கடற்றொழில் நீரியல் வளத்துறைப் பிரதிப் பணிப்பாளர் நடராசா கணேசமூர்த்தி இன்று வெள்ளிக்கிழமை (25) தெரிவித்தார்.

மாத்தறை, நீர்கொழும்பு மற்றும் திருகோணமலையினைச் சேர்ந்த மேற்படி மீனவர்களையும் அவர்களின் 8 படகுகளுடன் எரிபொருளினை வழங்கி அனுப்பி வைத்ததாகப் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்தார்.

இந்தியக் கடற்படையினர் மேற்படி மீனவர்களை காங்கேசன்துறை கடற்படையினரிடம் நேற்று வியாழக்கிழமை (24) இரவு கையளித்தனர்.

தொடர்ந்து, காங்கேசன்துறைக் கடற்படையினர் மேற்படி மீனவர்களை, தங்களிடம் கையளித்ததை அடுத்து அவர்களைச் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைத்ததாக பிரதிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .