2025 ஜூன் 28, சனிக்கிழமை

இந்திய மீனவர்கள் ஐவர் கைது

Kogilavani   / 2014 மார்ச் 27 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா, எஸ்.றொசேரியன் லெம்பர்ட்

கச்சதீவிற்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து இந்திய மீனவர்கள் ஐவர் வியாழக்கிழமை (27) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் வந்த இயந்திர கோளாறான ஒரு படகும் கச்சதீவுக் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக நெடுந்தீவுப் பொலிஸார்  தெரிவித்தனர்.

இராமேஸ்வரம் பகுதியினைச் சேர்ந்த மேற்படி மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டிலே கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

கடற்படையினர் மேற்படி மீனவர்களை தங்களிடம் ஒப்படைத்துள்ளதுடன், இவர்களை யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்து வருவதாக நெடுந்தீவுப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .