2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

60 மில்லியன் ரூபா செலவில் விடுதி திறப்பு

Kogilavani   / 2014 மார்ச் 02 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத், ற.றஜீவன்


பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் ரூபா 60 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட 'ஜயன் கே.ஸ்ரீகரன்' மாணவர் தங்குமிட விடுதி சனிக்கிழமை (01) காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேற்படி தங்குமிட விடுதி கல்லூரியின் பழைய மாணவரும் ஜேர்மனிய நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயன் கே.ஸ்ரீகரனின் நிதியுதவியின் மூலம் கட்டப்பட்டதுடன், அவரும் அவரது பாரியார் பார்பரா ஸ்ரீகரனும் இணைந்து இந்த விடுதியினைத் திறந்து வைத்தார்கள்.
2011 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இவ்விடுதியின் கட்டிடப் பணிகள் இவ்வருடம் பெப்ரவரி மாதம் நிறைவு பெற்று சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

திறப்பு விழா நிகழ்வில், பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடமாகாணக் கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா, கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .