Super User / 2011 ஏப்ரல் 02 , மு.ப. 09:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ரஸீன் ரஸ்மின், எம்.என்.எம்.ஹிஜாஸ், எம்.எஸ்.மும்தாஜ்)
புத்தளம் நகர சபையின் ஆரம்ப நடவடிக்கைகள் புதிய நகர பிதா கே.ஏ.பாயிஸின் தலமையில் நேற்று வெள்ளிக்கிழமை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் சிரேஷ்ட அமைச்சர் மில்ரோய் பெர்ணாண்டோ, வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான என்.டி.எம். தாஹிர், சிந்தக மாயாதுன்ன உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்களும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
சர்வமத ஆசிர்வாதங்களையடுத்து நகர பிதா கே.ஏ.பாயிஸ் மற்றும் பிரதி நகர பிதா ஆர் எஸ்.புஷ்பகுமார ஆகியோர் தமது கடமைகளை பொறுப்பேற்று கொண்டனர்.
அதனையடுத்து முதலாவது சபை அமர்வு இடம்பெற்றது. இந்த அமர்வில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசிய கட்சி சுயெட்சைக்குழு மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தெரிவான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
எனினும் முன்னாள் நகர பிதாவும் தற்போது ஆளும் கட்சி சார்பில் உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட எம்.என்.எம்.நஸ்மி நேற்றைய முதலாவது அமர்வில் கலந்து கொள்ளவில்லை.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
2 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
21 Dec 2025