Freelancer / 2022 ஓகஸ்ட் 13 , பி.ப. 07:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலன்னறுவை அரலகங்வில பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (12) உயிரிழந்துள்ளார்.
இவர் நேற்றிரவு தனது தோட்டத்தை கண்காணித்துக் கொண்டிருந்த போது காட்டு யானைகளால் தாக்கப்பட்டார்.
உயிரிழந்தவர் ருஹுனுகம பிரதேசத்தில் வசிக்கும் 61 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மாதுரு ஓயா வனப்பகுதியில் இருந்து வரும் காட்டு யானைகள் தொடர்ந்தும் பயிர்களை சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இப்பகுதியில் காட்டு யானை தாக்கி இந்த ஆண்டில் பலியான மூன்றாவது சம்பவம் இதுவாகும்.
51 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
55 minute ago