2026 மார்ச் 10, செவ்வாய்க்கிழமை

ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூடு தொடர்பில் மற்றுமொரு நபர் கைது

Freelancer   / 2026 மார்ச் 10 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜிந்துப்பிட்டி பகுதியில் ஜனவரி 16ஆம் திகதி நபரொருவரை சுட்டுக்கொலை செய்து, இரண்டு சிறுவர்களை காயப்படுத்திய  குற்றச்செயலுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கொழும்பு மத்திய குற்ற விசாரணை பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, குறித்த சந்தேகநபர் உடவலவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் உடவலவ, கொழும்புஹேஆர பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவராவார். 

இதேவேளை, இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு துப்பாக்கிதாரி கடந்த மார்ச் 03ஆம் திகதியும் கைது செய்யப்பட்டிருந்தார். 

கொழும்பு மத்திய குற்ற விசாரணை பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .