Editorial / 2022 பெப்ரவரி 16 , பி.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா நோய்க்கான பாணி மருந்தை அறிமுகப்படுத்தியதற்காக அதிகம் பேசப்பட்ட நபரான தம்மிக்க பண்டாரவின் இளைய சகோதரர், கொரேனா தடுப்பூசியின் மூன்று டோஸ்களையும் பெற்ற போதிலும், கொரோனா நிமோனியாவால் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கேகாலை ஹெட்டிமுல்ல பகுதியைச் சேர்ந்த 58 வயதுடையவர் என கேகாலை பொலிஸார் தெரிவித்தனர்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி வீட்டில் உயிரிழந்துள்ளார்.
கேகாலை வைத்தியசாலையில் நடத்தப்பட்ட ரபிட் அன்டிஜென் பரிசோதனையைத் தொடர்ந்து அவர், கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
4 minute ago
10 minute ago
14 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
10 minute ago
14 minute ago
24 minute ago