Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஜூன் 03 , மு.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
புளிச்சாக்குளம் 593 கிராம சேவை பிரிவின் கீழுள்ள புளிச்சாக்குளம், வட பத்துலு ஓய, கீரியங்கல்லி, புதுக்குடியிருப்பு, ஜஜ்ஜுவத்த, சாராகுடி கொலணி ஆகிய 6 கிராமங்களுக்கான அபிவிருத்தி நடவடிக்கைகள் மந்த நிலையில் முன்னெடுக்கப்படுவதாக அப் பிரதேச மக்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் கவனத்துக்கு கொணடுவந்தனர்.
வியாழக்கிழமை (02) காலை புத்தளம் மாவட்டத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் மக்கள் அமைச்சர் ஹக்கீமிடம் இது தொடர்பான கோரிக்கையொன்றை முன்வைத்தனர்.
இக்கோரிக்கையில், தத்தமது கிராமங்களுக்காக அரசாங்கத்தினால் ஒதுக்கப்படும் நிதித் தொகை போதாமையினால், அபிவிருத்தி நடவடிக்கைகள் அனைத்தும் மந்தகதியில் முன்னெடுக்கப்படுவதோடு, அன்றாடம் மக்கள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
அத்தோடு, 593 கிராம சேவை பிரிவுக்கு ஒதுக்கப்படும் நிதி கீரியங்கல்லி பிரதேசத்திற்கு மாத்திரமே போதுமானதாக இருப்பதால், இதர கிராமங்களுக்கான அபிவிருத்தி நடவடிக்கைகள் பிற்போடப்படுவதாகவும், அரசாங்க பாடசாலை, பொது வைத்தியசாலை, பஸ் தரிப்பிட வசதி, வீதி அபிவிருத்தி, சுகாதார வசதிகள் என்பன முறையாக இல்லாமையினால் மக்கள் பலவித அசௌகரியங்களுக்கு முகம்கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் தனித்தனியாகவோ அல்லது மூன்று கிராமங்களுக்கு ஒரு கிராம சேவை பிரிவு என்ற அடிப்படையிலோ கிராம சேவை பிரிவு அமைக்கப்பட வேண்டும் எனவும் அரசாங்கத்தினால் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்படும் நிதியை குறித்த 6 கிராமங்களுக்கும் தனித்தனியாக உரிய முறையில் கிடைக்கும் விதத்தில் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அப்பிரதேச மக்கள் அமைச்சரிடம் கோரிக்கையை முன்வைத்தனர்.
அமைச்சர் ஹக்கீம் இதுதொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
மேற்படி கோரிக்கைக்குரிய தரவுகளை வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸிடம் சேகரித்து சமர்பிக்குமாறு தாம் பணிப்புரை விடுத்துள்ளதாகவும், அத்தோடு இம் மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடி நிலைக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு துரிதமாக நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும், இக் கோரிக்கைகளை பரிசீலித்து உரிய அமைச்சரிடம் கையளிப்பதாகவும் கூறினார்.
33 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago