2025 மே 22, வியாழக்கிழமை

இந்திய மீனவர்கள் 16 பேருக்கும் விளக்கமறியல்

Kanagaraj   / 2013 மார்ச் 06 , பி.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். எம். மும்தாஜ்

கற்பிட்டி கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 16 பேரையும் எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கற்பிட்டி நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இவர்கள் கற்பிட்டி நீதவான் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்திய போதே அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்ததாக இவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளையில்  கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்திய மீனவர்கள் 16 பேருடன் அவர்கள் பயணித்த  3 டோலர் படகுகளையும் கைப்பற்றிய கடற்படையினர் படகுகளுடன் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.

இலங்கை கடற்படையின் விஜய படைய முகாம் அதிகாரிகளினால்  இம்மீனவர்கள் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

பின்னர் இவர்கள் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு கற்பிட்டி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X