2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

சிறுநீரக நோயினை கட்டுப்படுத்த 5 விசேட குழுக்கள் நியமனம்

Super User   / 2013 பெப்ரவரி 21 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.சீ.சபூர்தீன் 
                    
வட மத்திய மாகாணத்தில் மிக வேகமாக பரவி வரும் சிறுநீரக நோயினைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஐந்து விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை சிறுநீரக நோயினைக் கட்டுப்படுத்தும் மற்றொரு செயற்பாடாக சகல கிராமங்களுக்கும் சுத்தமான குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளன.

மேலும் அநுராதபுரம் வடக்கு குடிநீர் திட்டமும் ஆரம்பிக்கப்படவுள்ளது. மஹகனந்தராவ மற்றும் வாஹல்கட நீர்ப்பாசன திட்டங்களை மையமாகக் கொண்டு இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என வட மத்திய மாகாண சுகாதார சேவைகள் அமைச்சர் எச்.பீ.சேமசிங்க தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X