2025 மே 21, புதன்கிழமை

ஆஸி செல்ல முயன்ற 52பேர் கைது

Menaka Mookandi   / 2013 மே 29 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்றதாக கூறப்படும் 52 பேர் சிலாபம், தொடுவாவ கடற்பிரதேசத்தில் இன்று புதன்கிழமை கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 11 பெண்களும், 20 சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் கடல் மார்க்கமாக கொழும்புக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதா கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, சிலாபம் மற்றும் நீர்கொழும்பு பகுதியினை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினர் இவர்கள் தொடர்பில் தொடர்ந்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X