Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2012 ஜனவரி 23 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சீ.சபூர்தீன்)
கட்டுத் துவக்கொன்றில் சிக்கி 12 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவமொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை மிஹிந்தலை, நாமல்வத்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த மாணவனின் தந்தை கட்டிய கட்டுத்துவக்கினைக் கழற்றிக் கொண்டிருக்கும் போது அது திடீரென வெடித்துள்ளது. இதனால் குறித்த சிறுவன் பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் மிஹிந்தலை வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லும் வேளையில் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தை அடுத்து குறித்த சிறுவனின் தந்தை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர், காட்டு விலங்குகளை இலக்குவைத்து கட்டுத்துவக்குகள் இரண்டினை 22ஆம் திகதி இரவு கட்டியதோடு அடுத்த நாள் அதனைக் கழற்றிக் கொண்டு வந்து வீட்டில் மருந்துகளை அகற்றும் போதே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மிஹிந்தலை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பொலி;ஸ் பரிசோதகர் சுஜீவ சிரிவர்தனவின் வழிகாட்டலின் கீழ் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
2 hours ago
5 hours ago
5 hours ago