2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

மின்சார புனர்நிர்மான பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர் பலி

Super User   / 2012 ஜனவரி 08 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆகில் அஹமட்)

ஒயாமடுவ பகுதியில் மின்சார புனர்நிர்மான பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஊழியரொருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை மின்சார தாக்குதலுக்குட்பட்டு மரணமடைந்துள்ளதாக விலச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

தேசத்துக்கு மகுடம் கண்காட்சியை முன்னிட்டு ஒயாமடுவ பகுதியில் நடைபெற்று வரும் மின்சார புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தே போதே இவர் உயிரிழந்துள்ளார்.

இலங்கை மின்சார சபை ஊழியரான இவர், ஹோல்டரை பொருத்த முற்பட்டபோதே மின்சார தாக்குதலுக்கு உட்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட நபரை பேமடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

பேமடுவ பகுதியை சேர்ந்த 28 வயதான எம்.எம். நிலந்த பண்டா என்பவரே  உயிரிழந்தவர் என விலச்சி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X