2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

புத்தளம் கடற்கரை நவீன முறையில் புனரமைக்கப்படும்

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 22 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

புத்தளம் நகர கடற்கரையோரம் நவீன வசதிகளுடன் புனரமைக்கப்படும். அநுராதபுரம், வவுனியா போன்ற இடங்களில் இருந்து வரும் பயணிகள் புத்தளத்தின் ஊடாக கொழும்பை சென்றடைகின்றனர். இவ்வாறு குறித்த இடங்களில் இருந்து வருகை தரும் பயணிகள் முகம் கொடுக்கின்ற இடமாக புத்தளம் கடற்கரையோரம் விளங்குவதனால் இந்த கடற்கரையோரத்தை புனரமைத்து அதற்கு 'கொழும்பு முகம்' என்று பெயரிடப்படவுள்ளது.

இந்த 'கொழும்பு முகம்' கடற்கரையோர புனரமைப்புப் பணிகளுக்காக கடற்கரையோரங்களில் சட்டவிரோதமாக  கட்டப்பட்டிருக்கும் அரச மற்றும் தனியார் கட்டிடங்கள் யாவும் அகற்றப்படும் எனக் குறிப்பிட்ட புத்தளம் நகர சபைத் தலைவர் கே.ஏ.பாயிஸ் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X