Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2012 ஜனவரி 25 , மு.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆகில் அஹமட்)
அநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடா கலத்தாவ குளத்தில் குளித்துக்கொண்டிருந்தபோது இளம் குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
இரு பிள்ளைகளின் தந்தையான டி.ஜே.விஜேசூரிய (வயது 32) என்பவரே இவ்வாறு மரணமடைந்தவர் ஆவார். இவர் மதுபோதையில் காணப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.
இளைஞர்கள் சிலருடன் குளிக்கச்சென்ற இவர், நீரில் மூழ்கியதைத் தொடர்ந்து இவரது சடலத்தை தேடிக் கண்டுபிடிக்க அவர்களால் முடியாது போனது. இதன் பின்னர் பொலிஸாரின் உதவியுடன் சடலம் மீட்கப்பட்டதாகவும் அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
37 minute ago
58 minute ago
1 hours ago