2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து சிலாபத்தில் ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2012 பெப்ரவரி 13 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தனியார் பஸ் உரிமையாளர்களின் பணி பகிஷ்கரிப்பு மற்றும் எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து சிலாபத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதால் அச்சம் நிறைந்த சூழல் நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 3000 இற்கும் மேற்பட்ட ஆர்பாட்டக்காரர்கள் சிலாபம் பிரதான வீதிக்கு முன்பாக ஒன்று திரண்டுள்ளதுடன் டயர்களை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருவதாக நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, நீர்கொழும்பு- கொழும்பு இடையிலான பிரதான வீதி உட்பட பல பிரதான வீதிகளிலும் எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் முன்னெடுக்கப்படலாம் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X