2025 மே 23, வெள்ளிக்கிழமை

வருமான வரி பிரதி ஆணையாளருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Kanagaraj   / 2012 டிசெம்பர் 14 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலஞ்சம் பெறுவதற்கு முற்பட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட உள்நாட்டு வருமானவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உட்பட மூவருக்கான விளக்கமறியலும் நீடிக்கப்பட்டுள்ளது.

அந்த மூவரும் கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டபோதே அந்த மூவரையும் எதிர்வரும் 20 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

உள்நாட்டு வருமானவரித் திணைக்களத்தின் அநுராதபுர பிரதி ஆணையாளர் உட்பட மூவரின் விளக்கமறியலே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.

இலஞ்சம் வாங்கினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் சந்தேகத்தின் பேரில் அண்மையில் கைது செய்யப்பட்ட இந்த மூவரும் அநுராதபுரம் பிரதான நீதவான் ருவந்திகா மாரப்பன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூவரையும் நேற்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான உத்தரவிட்டிருந்தார்.

அநுராதபுரத்தைச் சேர்ந்த ஒருவரின் வருமான வரியினை குறைந்த நிலைக்கு அமைத்துத் தருவதற்காக 5 இலட்சம் ரூபாவை இவர்கள் கேட்டுள்ளனர்.  இந்த நிலையில்,  இந்தப்  பணத்தை உள்நாட்டு வருமானவரித் திணைக்கள வளாகத்தில் வைத்து வழங்கும்போது சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

அந்த வழக்கு விசாரணை கொழும்புக்கு மாற்றப்பட்டு கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவர்களுக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X