2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

சேதனப் பசளையில் உற்பத்தி செய்த நெல்லை கொள்வனவு செய்யத் திட்டம்

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 23 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

சேதனப் பசளைகளை உபயோகித்து உற்பத்தி செய்த நெல் வகையை  கிலோவிற்கு 40 ரூபா வீதம் கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நெல் கொள்வனவு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இரசாயனப் பசளையை உபயோகித்து உற்பத்தி செய்த நெல்லைக் கண்டுபிடிப்பதற்காக பிரத்தியேக முறையொன்றும் கையாளப்படவுள்ளது.

இரசாயனப் பசளை மானியத்திற்காக அரசாங்கம் செலவளிக்கும் பாரிய நிதியைக்  குறைத்தல், இரசாயனப் பசளை பாவனையின் மூலம் ஏற்படும் விளைவுகளைக் குறைத்தல் உள்ளிட்ட பல காரணங்களை நோக்கமாகக் கொண்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நெல் கொள்வனவு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X