2026 பெப்ரவரி 03, செவ்வாய்க்கிழமை

49 கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு

Janu   / 2026 பெப்ரவரி 03 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிறையிலுள்ள 49 கைதிகள் புதன்கிழமை (04) அன்று விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ. சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 34 ஆவது உறுப்புரையின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு இணங்க, சிறைக்கதிகளுக்கு இந்த விசேட ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 இதன்படி, சில விதிகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் இந்தக் கைதிகள் விடுவிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் பூர்த்தி செய்த ஒவ்வொரு வருடத்திற்கும் தலா ஒரு வார கால மன்னிப்பு வழங்கப்படவுள்ளதுடன், 75,000 ரூபாவிற்கும் குறைவான அபராதப் பணத்தைச் செலுத்தத் தவறியமைக்காக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் எஞ்சிய தண்டனைக் காலத்தை இரத்து செய்வதும் இந்த நிபந்தனைகளுள் அடங்குவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .