2025 மே 22, வியாழக்கிழமை

சிறுமியை கடத்திய இராணுவ வீரர் கைது

Kanagaraj   / 2013 மார்ச் 06 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். எம். மும்தாஜ்

15 வருடங்களும் 8 மாதங்கள் வயதைக் கொண்ட சிறுமி ஒருத்தியைக் கடத்திச் சென்றதாகக் கூறப்படும் இராணுவ வீரர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக ஆனமடு பொலிசார் தெரிவித்தனர். 

ஆனமடு திவுல்வௌ எனும் பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இராணுவ வீரர் இன்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரான இராணுவ வீரர் அதே பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுமியான மாணவியுடன் காதல் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டிருந்துள்ளார்.

இத் தொடர்பின் விளைவாக குறித்த சிறுமியான மாணவியை கடந்த 3 தினங்களுக்கு முன்னர் அச்சிறுமியின் பெற்றோருக்குத் தெரியாமல் குறித்த இராணுவ வீரர் கடத்திச் சென்றுள்ளார்.

இது தொடர்பில் ஆனமடு பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டினையடுத்து குறித்த இராணுவ வீரர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ள ஆனமடு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X