2025 மே 21, புதன்கிழமை

பண மோசடி செய்ய முற்பட்ட இருவர் கைது

Suganthini Ratnam   / 2013 மார்ச் 10 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆகில் அஹமட்

போலி தங்கநாணயங்களை வழங்கி பண மோசடி செய்ய முற்பட்டதாகக் கூறப்படும் இருவரை நொச்சியாகம நகரில் நேற்று சனிக்கிழமை மாலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

அத்துடன், இந்தச் சந்தேக நபர்களிடமிருந்து ஒரு கிலோகிராம் நிறையுடைய போலி தங்கநாணயங்களை கைப்பற்றியுள்ளதாக நொச்சியாகம பொலிஸார் தெரிவித்தனர்.

புதையல் மூலம் பெறப்பட்டதாகக் கூறி தங்கமுலாம் பூசப்பட்ட ஈயத்துண்டுகளை வியாபாரி ஒருவருக்கு வழங்கி 5 இலட்சம் ரூபா பணம்  பெற்றுக்கொள்ளுவதற்கு இந்த சந்தேக நபர்கள் இருவரும் முற்பட்டதாகக் கூறப்படுகின்றது. 

இது பற்றிய தகவல் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மாறுவேடத்தில் சென்ற பொலிஸார், சந்தேக நபர்களிடமிருந்து போலி தங்க நாணயங்களை கொள்வனவு செய்வது போன்று பாசாங்குபண்ணி  சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

கைப்பற்றப்பட்ட போலி தங்கநாணயங்களுடன் சந்தேக நபர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .