2025 மே 21, புதன்கிழமை

முந்தலில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை; ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2013 மார்ச் 26 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.மும்தாஜ்,-எம்.என்.எம்.ஹிஜாஸ்


புத்தளம், முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையமொன்றை  முற்றுகையிட்ட  கலால் திணைக்கள அதிகாரிகள், சந்தேக நபரொருவரையும் கைதுசெய்துள்ளனர்.

மதுரங்குளி வேலுசுமனர பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி நிலையமே நேற்று திங்கட்கிழமை முற்றுகையிடப்பட்டுள்ளது.

இம்முற்றுகையின்போது உற்பத்தி 75 கசிப்பு போத்தல்களையும் கசிப்பு உற்பத்திக்காக பயன்படுத்தப்படுகின்ற உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளதாக புத்தளம் கலால் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் கிடைத்த தகவலை அடுத்தே இம்முற்றுகை மேற்கொள்ளப்பட்டதாகவும் இவ்வதிகாரிகள் கூறினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .