2025 மே 21, புதன்கிழமை

குளத்தில் மூழ்கி ஒருவர் பலி

Kanagaraj   / 2013 ஏப்ரல் 15 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம். ஹிஜாஸ்

புத்தளம், பாவட்டமடு குளத்தில் நீராடிக்கொண்டிருந்த ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் 35 வயதுடைய அப்துல் ஹமீத் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபர் தனது வெளியூர் நண்பர்களுடன் இன்று திங்கட்கிழமை மாலை பாவட்டமடு குளத்தில் குளித்துக்கொண்டிருந்த போது காணாமல் போயுள்ளார். இதனையடுத்து அங்கு குளித்துக்கொண்டிருந்தவர்களில் சிலர் தேடிய போது குறித்த நபர்; நீரின் அடியிலிருந்து மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் புத்தளம் பொலிசார் மேலதிக விசாரனைகளினை ஆரம்பித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .