2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

பொய் பெயர் கூறி திருமணம் செய்ய முற்பட்டவருக்கு பிணை

Suganthini Ratnam   / 2013 ஜூன் 02 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

பொய் பெயர்களைக் கூறி பெண்ணொருரை ஏமாற்றி திருமணம் செய்ய முற்பட்டதாகக் கூறப்படும் ஒருவரை, அநுராதபுரம் மேலதிக மஜிஸ்திரேட்டும் மேலதிக மாவட்ட நீதவானுமான சந்திம எதிரிமான்ன ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை விடுவித்துள்ளார்;.

கைதுசெய்யப்பட்ட நபரின் சட்டபூர்வமான மனைவி செய்த  முறைப்பாட்டைத் தொடர்ந்து சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சந்தேக நபர் 3 பொய் பெயர்களை கூறி திருகோணமலையை சேர்ந்த பெண்ணொருவரை ஏமாற்றி திருமணம் செய்ய முற்பட்டிருந்த குற்றச்சாட்டின் பேரில் அநுராதபுரம் தலைமையக பொலிஸ் பிரிவின் விசேட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .