2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

முழந்தாளிடவைத்த முன்னாள் உறுப்பினருக்கு பிணை

Kanagaraj   / 2013 ஜூன் 27 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவகத்தேகம பாடசாலை ஆசிரியையை முழந்தாளிடவைத்த வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஆனந்த சரத்குமார பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

5000 ரூபா ரொக்க பிணையிலும் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளிலுமே அவர் இன்று வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரான வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஆனந்த சரத்குமார ஆனமடுவ நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோதே அவர் பிணையில் விடுவிக்குமாறு நீதவான் ரங்க திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

பிணையில் விடுவித்த நீதவான், சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கவேண்டாமெனவும் ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் பொலிஸ் நிலையத்திற்கு சென்று கையொப்பமிடுமாறும்; உத்தரவிட்டார்.

வழக்கு இன்று வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நவகத்தேகம பாடசாலை ஆசிரியை நீதிமன்றுக்கு சமூகமளித்திருக்கவில்லை. அத்துடன் இந்த வழக்கு விசாரணை ஜுலை 25 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .