2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வாகன விபத்தில் ஒருவர் பலி

Super User   / 2013 ஜூன் 28 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.முஸப்பீர்

கற்பிட்டி, நுரைச்சோலை பகுதியில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தார்.

எனினும் மோதிய வாகனத்தின் சாரதி தப்பிச் சென்றுள்ளதாக தெரிவித்த பொலிஸார், முச்சக்கர வண்டியை இனங்கண்டு சாரதியை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டனர்.

நுரைச்சொலை சந்தைக் கட்டிடத்தின் முன்னால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வீதியில் சென்று கொண்டிருந்த துவிச்சக்கர வண்டியொன்றுடன் முச்சக்கர வண்டி மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது, துவிச்சக்கர வண்டியில் பயணித்த பூலாச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X