2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

புதையல் தோண்டும் ஏற்பாடுகளில் ஈடுபட்ட நால்வர் கைது

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 14 , மு.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

புதையல் தோண்டுவதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 4 பேரை நவகத்தேகம பொலிஸார்  கைதுசெய்துள்ளனர்.

நவகத்தேகம, லெலேவெவ  பிரதேசத்திலேயே நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இவர்களை கைதுசெய்துள்ளதாக நவகத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸ் அவசர தொலைபேசிக்கு கிடைத்த  தகவலைத் தொடர்ந்து குறித்த இடத்திற்கு தாம் விரைந்து சென்றதாகவும் பொலிஸார் கூறினர்.

இதன்போது புதையல் தோண்டுவதற்காக  பயன்படுத்தப்படும் உபகரணங்களையும் பூஜை பொருட்களையும் கைப்பற்றியதுடன், 4 சந்தேக நபர்களையும் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

ஆனமடு, வெலேவெவ, தும்மோதர, களுத்துறை ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
சந்தேக நபர்களை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X