2026 மே 07, வியாழக்கிழமை

இலங்கையிலிருந்து ஆடுகள் ஏற்றுமதி

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 16 , மு.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையிலிருந்து மாலைதீவுகளுக்கான ஆடுகள் ஏற்றுமதியைத் தனியார் நிறுவனமொன்றினூடாக இலங்கை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. மந்தை வளர்ப்பு மற்றும் பயிற்சிகள் செயற்பாடுகளுக்காக இந்த ஏற்றுமதி முன்னெடுக்கப்படுகிறது. மாலைதீவுகள் மீன்பிடி மற்றும் விவசாய அமைச்சுக்கு இந்த ஆடுகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இதுவரையில் இந்தியாவிலிருந்து ஆடுகளை மாலைதீவுகள் இறக்குமதி செய்திருந்தது. இலங்கையிலிருந்து 2015 செப்டெம்பர் மாதத்தில் ஆடுகளை இறக்குமதி செய்ய ஆரம்பித்திருந்ததுடன், தற்போது பன்னல பிரதேசத்தில் வளர்க்கப்பட்ட இவ்வாறு ஏற்றுமதிக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

மாலைதீவுகளைச் சேர்ந்த பாற்பண்ணையாளர்கள் மத்தியில் ஆடுகள் வளர்ப்பு குறித்த பயிற்சிகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கிலும், மந்தை வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த ஆடுகள் மாலைதீவுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .