Janu / 2026 மே 07 , பி.ப. 09:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் முன்னணி நிதியியல் நிறுவனமான ஜனசக்தி குழுமம், தனது நலன்புரிப் பிரிவான ஜனசக்தி அறக்கட்டளையின் ஊடாக, 18 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான மருத்துவ உதவியை விரிவுபடுத்துவதற்காக ஜனாதிபதி நிதியத்துடன் இணைந்து செயற்படவுள்ளது.
இந்த இணைவாக்கமானது, ஒரு தேசிய நிதியத்துடன் ஏற்படுத்தப்படும் அரிதான மற்றும் முக்கியமான ஒரு கூட்டு நிறுவனப் பங்காண்மையைக் குறிப்பதோடு, இலங்கைக்கு நீடித்த மதிப்பை உருவாக்குவதில் கொண்டுள்ள அர்ப்பணிப்புக்கு மேலும் வலுவூட்டுகிறது.
முன்னெடுப்பின் முக்கிய அம்சங்கள்:
விண்ணப்பிக்கும் முறை: மேலதிக ஒத்துழைப்பைப் பெறுவதற்காக ஜனாதிபதி நிதியத்திற்கு விண்ணப்பிக்கும் போது, ஒரு ஒப்புதல் படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். 2026 மே 15 ஆம் திகதியிலிருந்து ஜனாதிபதி நிதியத்திற்குச் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள், ஜனசக்தி அறக்கட்டளை வழங்கும் மேலதிக நிதியுதவியைப் பெறுவதற்குத் தகுதி பெறும். ஜனாதிபதி நிதியமானது தொடர்ந்து பயனாளிகளைக் கண்டறிந்து, பரிசோதித்து, அங்கீகாரம் வழங்கும் பணிகளை மேற்கொள்ளும்.

27 minute ago
47 minute ago
54 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
47 minute ago
54 minute ago
3 hours ago