2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

செலான் வங்கியின் 2014இன் முதலாவது காலாண்டில் வரிக்குப் பின்னரான இலாபம் ரூ.514 மில்லியன்

A.P.Mathan   / 2014 மே 25 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


செலான் வங்கி 2014 மார்ச் மாதம் 31ஆம் திகதி முடிவடைந்த 3 மாதங்களில் வருமான வரிக்கு முன்னரான இலாபமாக 9மூ அதிகரிப்புடன் கிட்டத்தட்ட ரூபா 798 மில்லியனை பெற்றுக் கொண்டதன் மூலம் உறுதிமிக்க தொழிற்பாட்டை பதிவு செய்திருக்கின்றது. இதன்படி 2013ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்ட வரிக்குப் பின்னரான இலாபமான ரூபா 505 மில்லியனுடன் ஒப்பிடுகையில் இக் காலாண்டில் வரிக்குப் பின்னரான இலாபம் ரூபா 514 மில்லியன் வரை அதிகரித்துள்ளது.

எதிர்பார்க்கப்பட்டதை விடவும் குறைந்த மட்டத்திலான கடன் வளர்ச்சி மற்றும் வட்டிவீத எல்லைகள் மீதான துறைவாரியான அழுத்தம் என்பவற்றுக்கு மத்தியிலும் 2014 மார்ச் மாதம் 31ஆம் திகதி முடிவடைந்த 3 மாதங்களில் செலான் வங்கியின் தேறிய வட்டி வருமானமானது ரூபா 2.45 பில்லியனாக 13.7% இனால் அதிகரித்துள்ளது. ரூபா 461 மில்லியனாக காணப்பட்ட தேறிய கட்டண மற்றும் தரகு வருமானம் 2014இன் முதலாம் காலாண்டு காலப்பகுதியில் ரூபா 515 மில்லியனாக 11.67% இனால் அதிகரித்து இருக்கின்றது. கடந்த பல வருடங்களில் செலான் வங்கி தனது பிரதான வங்கியியல் தொழிற்பாடுகளில் அடைந்து கொண்டுள்ள திடமான வளர்ச்சியின் ஒருங்கிணைந்த ஆற்றலை இது வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது.

அது மாத்திரமன்றி, செலான் வங்கி 2013ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தனது உபாயத் திட்டத்தின் மீதான மீளாய்வை வெற்றிகரமாக பூர்த்தி செய்து அதனை தரமேம்படுத்தி உள்ளது. இதன்மூலம் வங்கியின் உபாயத் திட்டத்தை 2016ஆம் ஆண்டு வரைக்கும் விரிவுபடுத்துவதற்கு வழி பிறந்துள்ளது. இத்திட்டத்தில் – முற்பண/வைப்பு வளர்ச்சி, கிளை விஸ்தரிப்பு, வாடிக்கையாளர் சேவை மேம்படுத்தல், ஊழியர் அபிவிருத்தி,  செயற்படா சொத்து (NPA) குறைப்பு, செலவுக் கட்டுப்பாடு, புதிய சேவை உருவாக்கம், தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு, பங்குதாரர்கள் பெறுமதி போன்ற பல்வேறு முக்கிய விடயங்களில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நான்கு வருட காலப்பகுதியில் நாட்டிலுள்ள வசதி குறைந்த பாடசாலைகளில் 100 நூலகங்களை திறப்பதையும் இந்த உபாயத் திட்டம் குறித்துரைத்துள்ளது. 2013ஆம் ஆண்டிலிருந்து இதுவரை இவ்வாறான 26 நூலகங்கள் செலான் வங்கியால் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

2014இன் முதலாம் காலாண்டில் செலான் வங்கி தனது வைப்புத் தளத்தை ரூபா 167.4 பில்லியனில் இருந்து ரூபா 170.5 பில்லியனாக வளர்ச்சியடையச் செய்துள்ளது. அதேவேளை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 3 மாதங்களிலும் தேறிய முற்பணத் தொடர் எல்லையானது ரூபா 136.5 பில்லியனில் இருந்து ரூபா 131.8 பில்லியனாக சற்றுக் குறைவடைந்திருக்கின்றது.

வாடிக்கையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக 2014 இன் முதல் காலாண்டு காலப்பகுதியில் செலான் வங்கி 7 கிளைகளை மறுசீரமைத்துள்ளது. 2014 மார்ச் 31ஆம் திகதி இருந்தவாறு செலான் வங்கியின் சேவை நிலைய வலையமைப்பானது 151 கிளைகள், 160 ATM மையங்கள் மற்றும் 90 மாணவர் சேமிப்பு நிலையங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது.

2014 – முதலாம் காலாண்டின் இறுதியில் வங்கியின் 'மூலதன போதுமான தன்மை வீதம்' 15.70% ஆக முன்னேற்றம் கண்டிருந்தது. இத்துறையின் ஒழுங்குபடுத்துனரால் வரையறை செய்யப்பட்டிருக்கும் மட்டத்தை விடவும் இது மிகவும் அதிகமானதாகும்.

செலான் வங்கி இவ்வாறான சிறந்த தொழிற்பாடுகளை மேற்கொண்டதன் பயனாக, 2014 – முதலாம் காலாண்டில் பங்கொன்றிற்கான உழைப்பு ரூபா 1.49 ஆக காணப்பட்டதுடன்,  (வரிக்கு முன்னரான இலாபத்தில்) சொத்துக்கள் மீதான வருமானம் மற்றும் உரிமையாண்மை மீதான வருமானம் ஆகியவை முறையே 1.47% ஆகவும் 9.48% ஆகவும் பதிவாகியது. அதேவேளை, 2014 மார்ச் 31ஆம் திகதி இருந்தபடி செலான் வங்கியின் பங்கொன்றிற்கான தேறிய சொத்துப் பெறுமதி ரூபா 62.64 ஆக (குழுமம் சுள. 65.30) காணப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X